திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: புகழ் / Renown

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.



இரவைப்போல் கேட்டதையும் நிலைப்பதற்காக மரணமும் வித்தை அறிந்தவருக்கு அல்லாமல் மற்றவருக்கு அரிது.



புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.



பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம்.



துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.


Loss that is gain, and death of life's true bliss fulfilled,
Are fruits which only wisdom rare can yield.


Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise.



naththampoal kaedum uLadhaakum saakkaatum
viththakark kallaal aridhu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

கொடுப்பதும் ஒத்திசைவு கொள்ளவதுமே ஒர் உயிரின் ஊதியம். கொடுக்கும் ஒருவரை புகழ்வதே சிறந்த பேச்சாக அமையும். தன் குற்றத்தை திருத்திக் கொள்ளாமல் அடுத்தவரை கடிந்துக் கொள்வது குற்றம். புகழோடு தோன்றுவதே சரியானது. குற்றமற்றவரே வாழ்பவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.