திருவள்ளுவரின் திருக்குறள்

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.



இரண்டின் வகை அறிந்து இங்கே இயல்பனார் பெருமையை பேசுவதே உலகம்



பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.



இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.



நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.


Their greatness earth transcends, who, way of both worlds weighed,
In this world take their stand, in virtue's robe arrayed


The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others)



irumai vakaidherinh theeNdaRam pooNdaar
perumai piRangitru ulagu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

போதும் என்ற நிறைவை தரும் ஒழக்கத்துடன் வாழ்ந்து நிறைவடைந்தவர்களை விரும்பி அறிய துணிவு அவசியம். இறந்தவர்கள் எல்லாம் நிறைவானவர்கள் என்று எண்ணக்கூடாது. இரண்டால் ஆன உலகை புரிந்து கொள்ளவேண்டும். புலன்களை கட்டுப்பாட்டிற்க்குள் வைப்பதே சிறந்தது. அப்பொழுது, மனித ஆற்றல் முற்றிலும் உணரப்பட்டு இந்திரனைப்போல் வாழலாம். இத்தகைய பண்புள்ளவர்களே அரிய செயல்களை செய்வார்கள். புலன்கள் புலப்படுத்தும் சுவை, ஒளி,ஊறு,ஒசை,நாற்றம் என்ற ஐந்தால் இந்த உலகை அறிகிறோம். நிறைவானவர்கள் பெருமையை போற்றுவதே மறைநூல்கள்.நற்குணம் அடைந்தவர் கோபத்தை அதிக நேரம் தக்கவைத்துக்கொள்வது இல்லை.அந்தனர் என்பவர் யாவரும் எல்லா உயிரும் இன்பற்று மகிழவே எண்ணுவார்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.