திருவள்ளுவரின் திருக்குறள்

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.



மருந்தாக இருந்து தவறு இழக்காத மரத்தை போன்றது செல்வம் பெருமை பல உள்ளவரிடம் கிடைப்பது.



ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.



பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.



பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.


Unfailing tree that healing balm distils from every part,
Is ample wealth that falls to him of large and noble heart.


If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for disease.



marundhaakith thappaa maraththatraal selvam
perundhakai yaan-kan patin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

எதிர்பார்ப்பு இல்லாத மழைப் போல் உதவிட முனைதல் வேண்டும். தகுதியானவற்கு உதவுதல் போன்ற சிறந்த செயல் இல்லை. இடர்பட்ட காலத்திலும் உதவும் ஒருவர் காணக்கூடிய தெய்வம். யாவரும் வாழ நினைக்கும் நல்ல மனிதர்கள் மட்டுமே உயிர் வாழும் மனிதர்கள் மற்றவர்கள் இறந்தவர்கள் கணக்கில் வைக்க வேண்டும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.