திருவள்ளுவரின் திருக்குறள்

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.



ஊர் குளம் நீரால் நிறைந்து பயன் தருவதைப்போலவே உலகத்திற்கு உயர் ஞானம் பெற்றவர்களின் உயர்வு உள்ளது.



ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.



உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.



பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.


The wealth of men who love the 'fitting way,' the truly wise,
Is as when water fills the lake that village needs supplies.


The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank.



ooruNi neernhiRainh thatrae ulakavaam
paeraRi vaaLan thiru


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

எதிர்பார்ப்பு இல்லாத மழைப் போல் உதவிட முனைதல் வேண்டும். தகுதியானவற்கு உதவுதல் போன்ற சிறந்த செயல் இல்லை. இடர்பட்ட காலத்திலும் உதவும் ஒருவர் காணக்கூடிய தெய்வம். யாவரும் வாழ நினைக்கும் நல்ல மனிதர்கள் மட்டுமே உயிர் வாழும் மனிதர்கள் மற்றவர்கள் இறந்தவர்கள் கணக்கில் வைக்க வேண்டும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.