திருவள்ளுவரின் திருக்குறள்

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.



நன்மை செய்பவன் இல்லை என்பதை பேசும் பொழுது பயனற்றதை விரிவாக பேசுவதே உரைத்துவிடும்.



ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.



பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.



பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.


Diffusive speech of useless words proclaims
A man who never righteous wisdom gains.


That conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue".



nayanilan enpadhu sollum payanila
paarith thuraikkum urai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

ஏளனத்திற்கு உரிமை கொண்டாடும் பயனற்றதை பேசுபவன் மக்கள் என்பதில்லை பதர் என்றே கொள்ளலாம், பயன் தராதவற்றை பெரியவர்கள் எப்பொழுதும் உரைப்பதில்லை. ஐயமற அறிந்தவர்கள் தேவையற்றதை சொல்லுவதில்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.