திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: புறங்கூறாமை / Not Backbiting

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.



யாரோ ஒருவர் குறையை போல் தனது குறைகளை கண்டப் பின்பு கெடுதல் வருமோ புரிந்துகொள்ளும் உயிர்க்கு.



அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?.



புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?.



பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்.


If each his own, as neighbours' faults would scan,
Could any evil hap to living man?.


If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?.



Edhilaar kutrampoal thangutranG kaaNkiRpin
theedhuNtoa mannum uyirkku


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அறமற்று தேவையற்றதை செய்பரும் புறங்கூறாது இருப்பது நல்லது. புறம் பேசி வாழ்வதைவிட இறப்பது நன்று. நேருக்கு நேர் நின்று தாங்கமுடியா வார்த்தை சொன்னாலும் பரவயில்லை பின்னாக புறம் பேசாதே. தன் குற்றத்தை நிக்க முயல்பவர் பிறரை புறம் செய்யமாட்டார். யாரோ ஓருவர் குற்றம் போல் தன் குற்றத்தை ஆராய்ந்து திருத்தினால் துன்பம் என்பது இல்லாமல் போகும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.