திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: புறங்கூறாமை / Not Backbiting

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.



கண் எதிரே நின்று கண்ணை பார்த்து சொன்னாலும், சொல்லாக்கூடாது பின்விளைவுகளை முன்னே ஆராயாத சொல்லை.



எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.



ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.



நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.


In presence though unkindly words you speak, say not
In absence words whose ill result exceeds your thought.


Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.



kaNNindru kaNNaRach sollinum sollaRka
munnindru pinnoakkaach chol


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அறமற்று தேவையற்றதை செய்பரும் புறங்கூறாது இருப்பது நல்லது. புறம் பேசி வாழ்வதைவிட இறப்பது நன்று. நேருக்கு நேர் நின்று தாங்கமுடியா வார்த்தை சொன்னாலும் பரவயில்லை பின்னாக புறம் பேசாதே. தன் குற்றத்தை நிக்க முயல்பவர் பிறரை புறம் செய்யமாட்டார். யாரோ ஓருவர் குற்றம் போல் தன் குற்றத்தை ஆராய்ந்து திருத்தினால் துன்பம் என்பது இல்லாமல் போகும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.