திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: வெஃகாமை / Not Coveting

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.



கேட்டை விளைவிக்கும் என்று எண்ணவேண்டாம் வேட்கையை, வெற்றியை விளைவிக்கும் வேண்டுதல் அற்ற மனமகிழ்ச்சி.



வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.



பின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்‌.



விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.


From thoughtless lust of other's goods springs fatal ill,
Greatness of soul that covets not shall triumph still.


To covet (the wealth of another) regardless of consequences will bring destruction. That greatness (of mind) which covets not will give victory.



iRaleenum eNNaadhu veqkin viRaleenum
vaeNdaamai ennunhj serukku


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நடுநிலையற்ற வேட்கை நல்லதல்ல. பேரின்ப வீட்டுற்கு அது தடையாக இருக்கிறது. ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு வேட்கை அவசியம் என்றாலும் அடுத்தவரின் பொருள் மேல் ஆர்வம் கொள்ளுதல் கூடாது. வேட்கையை விட வேண்டாம் என்ற செருக்கு இன்பம் தரும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.