திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: வெஃகாமை / Not Coveting

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.



நீதியை அறிந்து வேட்கையை விட்ட அறிவுடையவரின் திறமையை அறிந்து உயர்வு வந்து சேரும்.



அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.



பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்.



பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.


Good fortune draws anigh in helpful time of need,
To him who, schooled in virtue, guards his soul from greed.


Lakshmi, knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others.



aRanaRindhu veqkaa aRivutaiyaarch saerum
thiRan-aRinh thaangae thiru


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நடுநிலையற்ற வேட்கை நல்லதல்ல. பேரின்ப வீட்டுற்கு அது தடையாக இருக்கிறது. ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு வேட்கை அவசியம் என்றாலும் அடுத்தவரின் பொருள் மேல் ஆர்வம் கொள்ளுதல் கூடாது. வேட்கையை விட வேண்டாம் என்ற செருக்கு இன்பம் தரும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.