திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: அழுக்காறாமை / Not Envying

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.



அழுக்கு மனம்(பொறாமை) என்ற பாவச்செயல் திருவை தீய வழியில் தள்ளி விடும்.



பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.



பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்.



பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்.


Envy, embodied ill, incomparable bane,
Good fortune slays, and soul consigns to fiery pain.


Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come).



azhukkaaRu enaoru paavi thiruchchetruth
theeyuzhi uyththu vidum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பொறாமை இல்லாதவரே ஒழுக்கமானவர், பகைவர் தரும் அழிவைவிட பொறாமை தந்துவிடும். பொறமையுள்ளவர் பிறவி மூப்பே. பொருள்களினால் நிறைவோ அடையமாட்டார்கள்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.