திருவள்ளுவரின் திருக்குறள்

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.



பொறுக்காதவருக்கு ஒரு நாள் கிடைக்கும் இன்பம் பொறுத்தவருக்கு துணையாகவும் போற்றும் புகழாகவும் இருக்கும்.



தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.



தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.



தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.


Who wreak their wrath have pleasure for a day;
Who bear have praise till earth shall pass away.


The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world.



oRuththaarkku orunhaaLai inbam poRuththaarkkup
pondrunh thuNaiyum pukazh


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பொறுத்துக் கொள்ளும் பண்பு அவசியம் தன்னை வேட்டும் மனிதனையும் தாங்கும் பூமித் தாய் போல் வாழ் என்கிறார் வள்ளுவ பெருந்தகை. நமது தகுதியால் அடுத்தவர் தவிர்க்கப்படுவார் மேலும், அடுத்தவரின் அசட்டுத்துத் தனமாக வார்த்தைக்கு மதிப்பளிக்காதவரே நோன்பில் சிறந்தவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.