திருவள்ளுவரின் திருக்குறள்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.



தோண்டுபவரையும் தாங்கும் பூமியைப் போல் தன்னை தரக்குறைவாய் பேசுபவரையும் பெருத்துக் கொள்வதே தலை சிறந்தது.



தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.



தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்.



தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.


As earth bears up the men who delve into her breast,
To bear with scornful men of virtues is the best.


To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.



akazhvaaraith thaangum nilampoalath thammai
ikazhvaarp poruththal thalai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பொறுத்துக் கொள்ளும் பண்பு அவசியம் தன்னை வேட்டும் மனிதனையும் தாங்கும் பூமித் தாய் போல் வாழ் என்கிறார் வள்ளுவ பெருந்தகை. நமது தகுதியால் அடுத்தவர் தவிர்க்கப்படுவார் மேலும், அடுத்தவரின் அசட்டுத்துத் தனமாக வார்த்தைக்கு மதிப்பளிக்காதவரே நோன்பில் சிறந்தவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.