திருவள்ளுவரின் திருக்குறள்

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.



எத்தனை துணைகளை பெற்றிருந்தால் என்ன, தினையளவு தேர முடியாது அடுத்தவர் பொருள் மேல் பற்றுகொண்டால்.



தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?.



அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?.



பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.


How great soe'er they be, what gain have they of life,
Who, not a whit reflecting, seek a neighbour's wife


However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another ?



enaiththuNaiyar aayinum ennaam thinaiththuNaiyum
thaeraan piRanil pukal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அடுத்தவரின் பொருள்களை பயன்படுத்திக் கொள்வது அறம் என்றால் என்ன என்று அறிந்தவர்கள் செய்வதில்லை. பகை பாவம் பழி பயமற்றவர் இல்லறத்தார் ஆவர். அவர் அடுத்தவர் குடும்ப வாழ்வை சிதைக்க காரணமாக இருக்க மாட்டார்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.