திருவள்ளுவரின் திருக்குறள்

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.



விரும்பி ஏற்றுக் கொள்ளவேண்டும் சுயமுன்னேற்றதிர்க்கான வரைமுறையை புரிந்து கொண்டு நடப்பவருக்கும் அதுவே துணையாக இருக்கிறது.



ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.



எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.



எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்.


Searching, duly watching, learning, 'decorum' still we find;
Man's only aid; toiling, guard thou this with watchful mind


Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid



parindhompik kaakka ozhukkam therindhoampith
therinum aqdhae thuNai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வாழ்தலுக்கான வரைமுறையே ஒழுக்கம் அது வீடுபெறு அடைய உதவும் என்பதால் உயிரைவிட போற்றவேண்டும். ஒழுகத்தின் வெளிப்பாடே குடும்பம். நல்லெழுக்கம் என்பதே நன்றியுணர்வுடன் இருப்பது. அதிலும் உலகத்துடன் ஒத்திசையும் படி நடப்பவர் கற்று அறிந்தவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.