திருவள்ளுவரின் திருக்குறள்

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.



என் கண்களை நிறைவாக்கும் மழைமுகிலாள் மூங்கில் போன்ற தோள் உடைய பேதைக்கு பெண்மைக்கு உரிய இளகிய குணம் பெரியதாக இருக்கிறது.



கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.



என் கண் நிறைந்த அழகையும், மூங்கிலைப் போன்ற தோளையும் உடைய இப்பேதைக்குப் பெண்கள் எல்லாரிடமும் இருக்கும் குண மேன்மையிலும் அதிக மேன்மை இருக்கிறது.



கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்.


The simple one whose beauty fills mine eye, whose shoulders curve
Like bambu stem, hath all a woman's modest sweet reserve.


Unusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo.



kanniraindha kaarikaik kaampaerdhoat paedhaikkup
penniRaindha neermai peridhu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

மறைத்தாலும் கைவிலகி காட்டுயது போல் கண் காட்டும் பொருள் ஒன்று உண்டு. கண் நிறைந்த நீர்மை நிறைவடைதல் என்பதை உணர்த்தும் அது பெண்மையின் இளமைத் தன்மையை போன்றது. கோர்க்கப்பட்ட மணிக்கு ஆதாரமான நூல் போல் பெண்ணின் அணிகலன்களுக்கு ஆதாரமான ஒன்று உண்டு. மலர துடிக்கும் மொட்டுக்குள் உள்ளதைப் போல் இளம் பெண்ணின் சிரிப்புள்ளும் ஒன்று உண்டு. நான் உற்ற துயரத்தை அழிக்கும் மருந்து அவளது அழகான வளையல்களில் உள்ளது. அரிதாக ஏற்படும் அன்பற்ற சூழல் பெரிதாக செயல்பட்டு இனிமையாக கூடினால் கலைந்துவிடும். குளிர்ச்சிக்கு வழிகாட்டிய அவரின் பிரிவை முன்பே அறிகின்றன வளையல்கள். ஒரு நாள் பிரிவு ஏழு நாள் போல் மேனி பசக்கிறது. அவளது ஆற்றாமையை வளையல் மற்றும் தோளுடன் பாதம் பார்த்து உணர்த்தினாள். பெண்ணின் பெண்மை பெருமைக்கு உரியது என்பேன் கண்ணில் காமநோய் இரவில் உண்டாக்குவதால்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.