திருவள்ளுவரின் திருக்குறள்

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.



காமம் விடப்படும் ஒன்றா ? நாணத்தை விடு நல்ல என் நெஞ்சே ஏன் பெற்றேன் இந்த இரண்டும்.



நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.



நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விடு; இரண்டையுமே விடமுடியாது என்பது உன் எண்ணம் என்றால், ஒன்றிற்கொன்று வேறுபட்ட இந்த இரண்டையும் சேர்த்துத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை.



நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு. இந்த இரண்டு செய்லகளையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது.


Or bid thy love, or bid thy shame depart;
For me, I cannot bear them both, my worthy heart!.


O my good soul, give up either lust or honour, as for me I can endure neither.



kaamam viduondroa naanvidu nannenjae
yaanoa poraen-iv virandu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

யோசனை செய்து சொல் என் நெஞ்சே காம நோய் தீர்க்கும் மருந்து எது. காதலிக்காத அவரை மறக்காமல் இருக்கும் என் நெஞ்சே நீ வாழ்க. அவரை நினைத்தபடி இருக்கும் உனக்கு அவர் மறந்தபடி இருப்பது தெரிந்தும் சிறுமைபட்டு இருக்கிறாயே. இறையாகிய காதலரை காண இயலவில்லை என்றால் என் கண்களை கொன்றுவிடு என் நெஞ்சே. உறவுகொண்டவர் உறவு இல்லாது போனலும் கைவிடாமல் உறவு கொள்கிறாய் என் நெஞ்சே. தாகத்தை மறைத்து இன்பத்தை தவிர்க்கிறாய் என் நெஞ்சே. காமத்தை விட முடியுமா நாணத்தை விடு என் நெஞ்சே. பரிவற்று பிரிந்தவர் பின் செல்கிறாயே என் நெஞ்சே. உள்ளே இருக்கும் அவரை பேய் போல் பிடிக்க பார்க்கிறாயே நெஞ்சே.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.