திருவள்ளுவரின் திருக்குறள்

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.



வளையலுடன் தொள்களும் வேதனையில் நெகிழ்வதால் அவரை கொடியவர் எனக் கூறுகிறேன் நொந்து.



வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.



வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன்.



என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்.


grieve, 'tis pain to me to hear him cruel chid,
Because the armlet from my wasted arm has slid.


I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened.



thotiyodu thoalnekizha noval avaraik
kotiyar enakkooral nondhu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வறுமை போக்க வெளியூர் சென்றவரை எண்ணியபடி நறுமலரை கண்டு நாணுகிறது கண். நாடுபவர் நாடிவாராததை கண்டு கண்களில் பனி வருகிறது. மணமான நாட்களில் பருந்திருந்த தோள் அவர் பிரிவை உணர்த்தும்படி இளைத்திருக்கிறது. பிரிந்த கொடியவரின் கொடுமை உரைக்கிறது என் வளையல்கள். வளையலும் அதை அணிந்த தோள்களும் அவர் கொடியவர் என உரைக்க செய்தது. வாடிய தோள் கண்டு எழும் புசலால் நெஞ்சே பெருமைகொள். கூடி மகிழ்ந்த கைகள் தடவிய நெற்றியில் பசலை படர்ந்தது. காற்றும் புகாதபடி அணைத்து மகிழ்ந்த பெண்ணின் கண் இன்று பெரும் மழை உண்டாக்கியது. கண்ணில் பசப்பு கலைந்தது முன்பு கூடி மகிழ்ந்ததை நினைத்து.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.