திருவள்ளுவரின் திருக்குறள்

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.



கருகச் செய்யும் மாலைக்கு தூதாகி தாக்குகிறது தேடுபவன் குழல் போன்ற கொல்லும் படை.



ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது.



முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது.



காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது.


The shepherd's pipe is like a murderous weapon, to my ear,
For it proclaims the hour of ev'ning's fiery anguish near.


The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me).



azhalpoalum maalaikkuth thoodhaaki aayan
kuzhalpoalum kollum padai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

மாலையோ இல்லை மணமானவர்கள் உயிர் வாங்கும் வேலையோ எப்படி இருப்பினும் உன்னை வாழ்த்துகிறேன். உன் துணையும் என் துணை போன்று பிரிந்து கூடும் ஒன்றோ பனி போல் துளித்து அரும்புகிறதே. காதலர் இல்லாத பொழுது வரும் மாலை ஒரு கொலைகளத்து எதிலர் போல் இருக்கிறது. காலை பொழுதிற்கு நன்றியும் மாலை பொழுதிற்கு பகையும் ஆனாது எனோ?. மாலை தரும் துன்பம் அவருடன் இருந்த காலத்தில் அறியவில்லை. காலை அரும்பி பகலில் போதாகி மாலையில் மலரும் இந்த காமநோய். போர்களத்து ஓசையாக இருக்கிறது இந்த மாலை. நிலவும் மயங்கி நிலை குலைகிறது மாலை பொழுதில். ஒயாத உயிரும் மாய்கிறது பொருள் தேடி சென்ற தலைவன் நினைவால்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.