திருவள்ளுவரின் திருக்குறள்

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.



நேரில் கண்டு இருந்தது எப்படியோ கனவில் கண்ட பொழுதும் இருந்தது அதே இனிமை.



முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.



முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான்.



காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!.


As what I then beheld in waking hour was sweet,
So pleasant dreams in hour of sleep my spirit greet.


I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant.



nanavinaal kandadhooum aange kanavundhaan
kanda pozhudhae inidhu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

காதலரை இணைக்க வந்த கனவை எப்படி கொண்டாடி மகிழ்வேன். மீன் போன்ற கண்கள் உறங்கும் தருணம் காதலரை கலந்தால் எப்படி உரைப்பேன். நேரில் நெருங்காத என் காதலர் கனவில் கலப்பதால் நிலைக்கிறது என் உயிர். கனவில் என் காமம் நிறைவாகிறது. நேரில் கண்ட சுகம் கனவு தருகிறது. நேரில் நடக்கவே நடக்காது என்றால் கனவில் நீங்காமல் இருக்கலாம். நேரில் வராத கொடிய காதலர் கனவில் வந்து பிழைக்கச் செய்கிறார். உறக்கத்தில் உறவாடி விழிப்பில் நெஞ்சம் நிறைகிறார். நேரில் நெருங்காதவரை நொந்துக் கொள்பவர்கள் கனவிலும் காணதவர்கள். நாங்கள் கூடவில்லை என நினைக்கும் இவ்வூர் மக்கள் கனவில் இணைவதை அறியாதவர்கள்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.