திருவள்ளுவரின் திருக்குறள்

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.



காதலில் வீழ்ந்தவர் இடத்தில் இருந்து இனிமையான சொல் பெறாமல் உலகத்தில் வாழ்பவரை விட வன்மையானவர் இல்லை.



தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை.



தம்மால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு இல்லை.



பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது.


Who hear from lover's lips no pleasant word from day to day,
Yet in the world live out their life,- no braver souls than they!.


There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved.



veezhvaarin insol peraaadhu ulakaththu
vaazhvaarin van-kanaar il


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

தானும் வீழ்ந்து தலைபட்டவரையும் விழச் செய்பவரே காமத்தின் கனி உண்டவர். வானம் போல் கொடுத்து வாழ்த்துவது காதலில் விழுந்தவருக்கு தானும் வீழ்ந்து உதவுவது போன்றது. வீழ்ந்தவர் வீழ்த்தப்பட்டவர் வாழ்கிறோம் என்ற செருக்கு அடைகின்றார்கள். வீழாதவர் காதலுக்கு உகந்தவர் இல்லை. காதலருக்கு காதல் செய்வதே உதவி மாற்று இல்லை. காவடி போல் இருபக்கமும் இருப்பதே காதல். இயற்கை மாற்றம் தரும் காமன் ஒருவர் மேல் செயல்படுகிறான். அருகே நாடி வரவில்லை என்றாலும் அவரது வார்த்தைகள் இசை போன்றது. காதலின் இசை கேட்காதவர் வறுமையான வாழ்வு வாழ்ந்தவர். நெஞ்சே உன்னை வாழ்த்துகிறேன் உறவை நாடாத அவருக்கு சொல் கடலை தூர்க்க முயலும் செயல் என்று.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.