திருவள்ளுவரின் திருக்குறள்

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.



உடலில் பசலை படர்ந்து எப்பாடு பட்டால் என்ன நயமாக பேசி பிரிந்தவர் நல்ல நிலை உடையவர் என்றால்.



பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.



இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர்தாம் நல்லவர் என்றால், என் மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!.



பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!.


Well! let my frame, as now, be sicklied o'er with pain,
If he who won my heart's consent, in good estate remain!.


If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow.



pasakkaman pattaangen maeni nayappiththaar
nannilaiyar aavar enin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நயம்பட பேசி உடன்படாத என்னை ஒப்புக்கொள்ள செய்தார் என்பதால் என் பசலையை யாரிடமும் சொல்ல முடியவில்லை. பசலையோ அவரைப் போல் என்னில் பரவுகிறது. என் அழகையும் நாணத்தை அவர் பெற்றுக்கொண்டு நோயும் பசலையும் எனக்கு தந்தார். அவரது திறத்தை எண்ணியபடி இருப்பினும் பசப்பு வருகிறதே. அவர் என்னை பிரியும் பொழுதே பசப்பு தொற்றுகிறதே. விளக்கை அகற்ற இருல் பரவுவது போல் அவர் முயக்கம் முடிந்ததும் பசலை பரவுகிறது. பசலை படந்தது என்றே கூறுகின்றார் காதலன் பிரிந்தான் என கூறுவது இல்லை. எப்படியோ அவர் நன்றாக இருந்தால் போதும். (பசலை என்பது பிரிவு தாங்கமல் தோலில் ஏற்படும் மாற்றம்)


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.