திருவள்ளுவரின் திருக்குறள்

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.



விளக்கை அகற்றியதும் பரவ பார்க்கும் இருளைப் போல் கணவன் முயக்கம் அகற்றியதும் பரவ பார்க்கும் பசப்பு.



விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் ‌சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது.



விளக்கு மெலிவதைப் பார்த்து நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்த பசலை வரும்.



விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது.


As darkness waits till lamp expires, to fill the place,
This pallor waits till I enjoy no more my lord's embrace.


Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband's intercourse.



vilakkatram paarkkum irulepoal kon-kan
muyakkatram paarkkum pasappu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நயம்பட பேசி உடன்படாத என்னை ஒப்புக்கொள்ள செய்தார் என்பதால் என் பசலையை யாரிடமும் சொல்ல முடியவில்லை. பசலையோ அவரைப் போல் என்னில் பரவுகிறது. என் அழகையும் நாணத்தை அவர் பெற்றுக்கொண்டு நோயும் பசலையும் எனக்கு தந்தார். அவரது திறத்தை எண்ணியபடி இருப்பினும் பசப்பு வருகிறதே. அவர் என்னை பிரியும் பொழுதே பசப்பு தொற்றுகிறதே. விளக்கை அகற்ற இருல் பரவுவது போல் அவர் முயக்கம் முடிந்ததும் பசலை பரவுகிறது. பசலை படந்தது என்றே கூறுகின்றார் காதலன் பிரிந்தான் என கூறுவது இல்லை. எப்படியோ அவர் நன்றாக இருந்தால் போதும். (பசலை என்பது பிரிவு தாங்கமல் தோலில் ஏற்படும் மாற்றம்)


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.