திருவள்ளுவரின் திருக்குறள்

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.



வரவில்லை என்றாலும் தூங்குவது இல்லை வந்தாலும் தூங்குவது இல்லை அன்பால் இணைந்தவர் கண்.



காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கி‌டையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.



அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான்.



இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்துவிட்டாலும் பிறகு தூங்குவதில்லை. இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும்.


When he comes not, all slumber flies; no sleep when he is there;
Thus every way my eyes have troubles hard to bear.


When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony.



vaaraakkaal thunjaa varindhunjaa aayidai
aaragnar utrana kan


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

கண் தானாகவே தனக்கு காம நோய் உண்டாக்குகிறது. தெளிவாய் உணராமலேயே கண்டு அல்லல் படுகிறது. வேண்டும் என்று விரும்பி பார்த்து விலகி தவிக்கும் கண்ணின் செயல் நகைப்புக்குரியது. நீர் வடிந்து உலர்ந்த கண் நித்தியத்தை அடையும் காமநோய் கடவுள் மேல் வந்தால், பால் பற்றி வந்தால் பிறவித் தொடர் வரும். பிறவிக் கடல் கடக்கும் வேட்கையால் என் கண் இரவிலும் உறங்க மறுக்கிறது. இனிமையிலும் இனிமை இந் நோய் செய்த கண் இதனுடன் உட்படுவதால். அழுது அழுது கண்ணிர் வற்றினாலும் அவரை கண்டதால் மகிழ்வாய் இருக்கிறது. உறவு பாராட்டாமல் இருக்கவும் செய்யும் இம்மனிதர் இடத்தில் என் கண் அவரை காட்டிவிட்டது. விலகி நின்றாலும் கூடி மகிழ்ந்தாலும் உறக்கம் இல்லை இந்த கண்களுக்கு. மறைத்து வைப்பது ஊரார்க்கு அரிதாக இருக்க காரணம் என்னை போல் வெளிப்படுத்தும் கண் இருப்பதே.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.