திருவள்ளுவரின் திருக்குறள்

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.



உடல் வேட்கையான காமம் என்ற பெரும் வெள்ளத்தினை நீந்திக் கரை காண முடியவில்லை நள்ளிரவும் நான் தனித்திருக்கிறேன்.



காமம் என்னும்‌ வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.



காதல் துன்பமாகிய கடலை நீந்தியும் என்னால் கரை காண முடியவில்லை. நள்ளிரவுப் பொழுதினும் உறங்காமல் நான் தனியாகவே இருக்கிறேன்.



நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்; அதனால், காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன்.


I swim the cruel tide of love, and can no shore descry,
In watches of the night, too, 'mid the waters, only I!.


I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live.



kaamak katumpunal neendhik karaikaanen
yaamaththum yaane ulen


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

மறைக்க முடியாதபடி ஊற்று நீராய் வெளிப்படுகிறது என் நோய். இதை உண்டாக்கிய அவரிடம் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது. காமமும் வெட்கமுட் காவடிக் தண்டுபோல் இருந்து என்னை வேதனை அடையச் செய்கிறது. காமக்கடல் நீந்திட ஏதுவான கப்பல் இல்லை. நட்பாய் இருக்கும் பொழுதே வராத அவர் வெறுத்தால் என்ன செய்வாரோ. கடல் அளவு இன்பம் தரும் காமமே தடை உண்டானால் கடலைவிட துன்பம் தருகிறது. காமக் கடல் நீந்த முடியாமல் நள்ளிரவிலும் நான் தவிக்கிறேன். எல்லாவற்றிற்கும் ஓய்வு தந்த இரவு என்னை துணையாக விழுத்திருக்கச் செய்தது. கொடியவர்கள் செய்யும் கொடுமைவிட துணை இல்லா இந்த இரவு கொடுமையானது. உள்ளம் போல் நினைக்கும் இடம் எல்லாம் சொல்ல முடியும் என்றால் வேதனையான கண்ணீரில் மிதக்காது என் கண்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.