திருவள்ளுவரின் திருக்குறள்

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.



மலர் போன்ற கண்களை உடையவளின் பெருமை அறியாமலேயே வதந்தி பேசி உதவியது இவ்வூர்.



மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.



மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.



அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது.


The village hath to us this rumour giv'n, that makes her mine;
Unweeting all the rareness of the maid with flower-like eyne.


Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me.



malaranna kaNNaaL arumai aRiyaadhu
alaremakku eendhadhiv voor


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பலர் பேசுவதால் காதல் வாழும் என ஆருயிர் அறிவது ஒரு பாக்கியம். இறை உணர்ந்தவன் என்பவனும் காதல் வசப்பட்டவன் என்பதால் உயிருக்கு இது இன்பம். மலர் போன்ற கண்ணின் அருமை அறியாமல் வதந்தி பேசும் இந்த ஊர். ஊரார் சொல்படி காதல் ஈடாகட்டும் அவர்களே காதலாகிய இறை பற்றை வளர்க்கும் தாய் போன்றவர்கள். மகிழ்ந்து இருக்க மது தேடுவது போல் காமம் தோன்ற இன்பம் உண்டாகிறது. சும்மா ஒரு நாள் பார்த்ததற்கு கிராணம் போல் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. ஊரார் பேச்சி எருவாக அம்மாவின் பேச்சி நீராக காதல் பயிர் வளரந்தது. நெய் கொண்டு நெருப்பை அணைப்பது போன்றது காதலை பழித்து அழிக்க நினைப்பது. வதந்திக்கு முற்றாய் பிரிவதை தவிர்த்தார். இவ்வூர் மக்கள் வதந்தியால் என் காதலர் என்னை வந்தடைந்தார்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.