திருவள்ளுவரின் திருக்குறள்

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.



வளையல் அணிந்த விளையாட்டுப் பெண் தந்தாள் மடலொடு மாலை நேரத்துத் துயரத்தையும் .



மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.



மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.



மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்.


The maid that slender armlets wears, like flowers entwined,
Has brought me 'horse of palm,' and pangs of eventide!.


She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night.



thodalaik kuRundhoti thandhaaL matalodu
maalai uzhakkum thuyar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

காமத்தின் வலி போக மடல் ஏறுதல் ஒருவகை தீர்வு தரும். இதை தவிர்க்க வெட்கத்தை விலக்கிடச் செய்யவேண்டும். நாணமும் நல்ல ஆண்மையும் காமத்தால் மடல் ஏறும். காமம் என்ற கொடிய வெள்ளம் நாணம் என்ற படகை கவிழ்த்துவிடும். மாலை நேரத்து துன்பத்தை வளையல் அணிந்தவள் தந்தாள். எந்த வேலையும் செய்யமுடியாத மடல் அடைந்தேன் பேதை அவளை என் கண் கண்டதால். கடல் அளவு காமம் இருந்தாலும் மடல் அடைய பெண் பெருமைக்குரியவள். நிறைவு அடையதவர் மதிக்கத் தகுந்தவர் இல்லை என்பதை அறியாமல் மறையாமல் காமம் வெளிப்படுகிறது. நம் ஏக்கம் அறியாதவர் நம் கண்ணில் படும்படியே நகைப்பர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.