திருவள்ளுவரின் திருக்குறள்

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.



வாழ்தலுக்கு உயிர் போன்று வளம் தருபவள் சாதல் அதற்கு காரணமாக நீங்கும் இடத்து இருக்கிறாள்.



ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.



என் மனைவி, நான் அவளுடன் கூடும்போது உயிருக்கு உடம்பு போன்றிருக்கிறாள். அவளைப் பிரியும்போது உயிர் உடம்பை விட்டுப் பிரிவது போன்றிருக்கிறாள்.



ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன்.


Life is she to my very soul when she draws nigh;
Dissevered from the maid with jewels rare, I die!.


My fair-jewelled one resembles the living soul (when she is in union with me), the dying soul when she leaves me.



Vaazhdhal Uyirkkannal Aayizhai Saadhal
Adharkannal Neengum Itaththu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பாலில் தேன் கலந்தது போல் முத்தம் தித்திக்கும். உடலும் உயிரும் கலந்தது போல் கலந்த அவள் கண்மணியின் கருவிழியை கடந்து நெற்றியிலும் நிறைகிறாள். வாழ்தலுக்கான உயிராக இருந்து காக்கிறாள். அவளை மறக்கவே இல்லை எனவே நினப்பதும் இல்லை. அவரோ கண்ணை விட்டு விலகுவது இல்லை, மை கொண்டு மறைக்கவும் இயலவில்லை, நெஞ்சில் நிலைப்பதால் வெப்பமான உணவு உட்கொள்ளவில்லை. கண்ணையும் இமைக்காமல் அவரை காப்பதால் அன்பற்றவராக இந்த மனிதர்கள் அவரை நினைக்கிறார்கள். அவரோ என் உள்ளத்தில் நீங்காமல் இருக்கிறார்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.