திருவள்ளுவரின் திருக்குறள்

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.



குறைந்து நிறையும் நிலையற்ற நிலாவினைப் போல் மாறுபாடு உண்டோ மங்கை முகத்திற்கு.



குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே.



நட்சத்திரங்கள் ஏன் கலங்க வேண்டும்? தேய்ந்து முழுமை பெறும் ஒளிமிக்க நிலாவில் இருப்பது போல என் மனைவியின் முகத்தில் மறு ஏதும் உண்டா என்ன?.



தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!.


In moon, that waxing waning shines, as sports appear,
Are any spots discerned in face of maiden here?.


Could there be spots in the face of this maid like those in the bright full moon ?.



aRuvaai niRaindha avirmadhikkup poala
maRuvuNdoa maadhar mukaththu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

காதலின் நலத்தை கூட்டி சொல்வதாக அமைந்த இந்த அதிகாரத்தில் அனிச்ச மலரின் மென்மையிலும் மென்மையான பெண் தன்னை வீழ்த்துகிறாள் என்றும், அவளது கண் மலர் பலர் கண்டு வியக்கும்படி உள்ளது என்றும், உடல் முறிந்துவிடும் முத்தமும் வெறி கூட்டும் வாசணையும் வேல் போன்ற கண்ணும் மூங்கில் போன்ற தோளும் அவளுக்கு என்றும், அவளின் கண் அழகால் குவளையும் தலை கவிழும் என்றும், ஓசை கேட்டு முறியும் கழுத்து என்றும், அவளின் முகமும் நிலவும் பார்த்த மீன் கலக்கம் அடைந்தது என்றும், நிலைவை போல் குறை பெண்ணுக்கு இல்லை என்றும், நிலவும் ஒளிவிட வேண்டும் என்றால் காதலை வாழ்த்து நிலவே என்றும், மலர்ந்த கண் போல் முழுமையாக தோன்று நிலவே என்றும், அனிச்சமுத் அன்னத்தின் இறகும் பெண்ணின் பாதத்திற்கு வலி உண்டாக்கும் என்றும் உரைக்கிறார்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.