திருவள்ளுவரின் திருக்குறள்

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.



முழு நிலவையும் பருவ பெண்ணின் முகத்தையும் வேறுபடுத்தி அறியாமல் நிலை கலங்கியது மீன்.



விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.



அதோ, நிலாவிற்கும் என் மனைவியின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்திரங்கள், தாம் இருந்த இடத்திலிருந்து இடம் விட்டுக் கலங்கித் திரிகின்றன!.



மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன.


The stars perplexed are rushing wildly from their spheres;
For like another moon this maiden's face appears.


The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance.



madhiyum madandhai mukanum aRiyaa
padhiyin kalangiya meen


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

காதலின் நலத்தை கூட்டி சொல்வதாக அமைந்த இந்த அதிகாரத்தில் அனிச்ச மலரின் மென்மையிலும் மென்மையான பெண் தன்னை வீழ்த்துகிறாள் என்றும், அவளது கண் மலர் பலர் கண்டு வியக்கும்படி உள்ளது என்றும், உடல் முறிந்துவிடும் முத்தமும் வெறி கூட்டும் வாசணையும் வேல் போன்ற கண்ணும் மூங்கில் போன்ற தோளும் அவளுக்கு என்றும், அவளின் கண் அழகால் குவளையும் தலை கவிழும் என்றும், ஓசை கேட்டு முறியும் கழுத்து என்றும், அவளின் முகமும் நிலவும் பார்த்த மீன் கலக்கம் அடைந்தது என்றும், நிலைவை போல் குறை பெண்ணுக்கு இல்லை என்றும், நிலவும் ஒளிவிட வேண்டும் என்றால் காதலை வாழ்த்து நிலவே என்றும், மலர்ந்த கண் போல் முழுமையாக தோன்று நிலவே என்றும், அனிச்சமுத் அன்னத்தின் இறகும் பெண்ணின் பாதத்திற்கு வலி உண்டாக்கும் என்றும் உரைக்கிறார்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.