திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கயமை / Baseness

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.



அறைந்து ஓசை எழுப்பும் பறை போன்றவர் கயவர் காரணம் கேட்ட மறைப்பொருளை தான் உணராது பிறர்க்கு உரைப்பதால்.



கயவர், தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால், அறையப்படும் பறை போன்றவர்.



தாம் அறிந்த ரகசியங்களைப் பிறரிடம் வலியச் சென்று சொல்லுவதால், அடிக்கப்படும் பறையைப் போன்றவர் கயவர்.



மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்.


The base are like the beaten drum; for, when they hear
The sound the secret out in every neighbour's ear.


The base are like a drum that is beaten, for they unburden to others the secrets they have heard



aRaipaRai annar kayavardhaam kaetta
maRaipiRarkku uyththuraikka laan


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நல்மனிதர் போன்ற கயவரும் ஒன்றுபோலவே இருப்பார்கள், நல்லவை அறிந்தவர்களைவிட கயவர் உள்ளம் அவலம் இன்றி இருப்பதாலும், நினைத்ததை செய்வதாலும் உயர்வானவர்களாக தெரிகின்றார்கள். கயவரை சிறந்தவன் என்பவன் கிழானவன். சான்றாக இருப்பார்கள் நல்வர்கள், கரும்பாக நசுக்கப்படும் கீழானவர்கள் அச்சத்தை ஆசாரமாக கொள்வர். நல்லாடை அணிவதையும் நற்சோறு உண்ணுவதையும் கண்டு குற்றம் காண நினைப்பவர் கீழானவர்கள். கயவர்கள் தங்களை விலைக்கு அடிமையாக இருப்பதை விரைந்து செய்வார்கள்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.