திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: இரவச்சம் / The Dread of Mendicancy

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.



கொடுக்கும் பண்புள்ள உள்ளம் உருகும் மறைத்தலை செய்யும் உள்ளம் இருப்பதையும் இல்லாமல் செய்து கெடும்.



இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும், உள்ளதை ஒழிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும்.



பிறரிடம் போய்ப் பிச்சை ஏற்று நிற்கும் கொடுமையை எண்ணினால் என் உள்ளம் உருகும். இக்கொடுமையைப் பார்த்த பிறகும் இல்லை என்று மறைப்பவர் கொடுமையை எண்ணினால் உருகும் உள்ளமும் இல்லாது அழிந்துவிடும்.



இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது.


The heart will melt away at thought of beggary,
With thought of stern repulse 'twill perish utterly.


To think of (the evil of) begging is enough to melt one's heart; but to think of refusal is enough to break it.



iravuLLa uLLam urukum karavuLLa
uLLadhooum indrik kedum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

சலிப்பற்ற கண் போல் கொடுக்கும் ஒருவர் இருப்பினும் கேட்காமல் இருப்பதே கோடி நன்மை. கேட்டுப் பெற்றே வாழ வேண்டும் என்றால் கெட்டு ஒழியட்டும் உலகை படைத்தவன். வறுமையை துன்பத்தை அடுத்தவர் உதவியால் அழிக்க வேண்டும் என்பது கொடுமையிலும் கொடுமை. கேட்டுப் பெறமல் உழைத்து உண்ணும் அரிசி குறைந்த கஞ்சி சிறப்பானது. கேட்பவரை அவமதிப்பவர் இடத்தில் கேட்க வேண்டாம். கொடுப்பவர் உள்ளம் மென்மையாகவும் மேன்மையாகவும் இருக்கும். கொடுக்க மறுப்பவர் தன் உயிரை எப்படி காக்கமுடியும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.