திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: இரவு / Mendicancy

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.



கேட்பவற்கு கொடுப்பவர் இல்லை என்று மாறினால் கொடுப்பதையே தொழிலாக கொண்ட உலகில் மனிதச் செயல்கள் மரப்பொம்மையின் இயக்கம் போல் இருக்கும்.



இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.



பிச்சை ஏற்பார் என்பவர் இல்லாது போய் விட்டால், குளி்ர்ந்த பெரிய இவ்வுலகத்தில் வாழ்பவரின் வாழ்க்கை, வெறும் மரப்பொம்மைகளின் போக்குவரத்தாகவே ஆகிவிடும்.



வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை.


If askers cease, the mighty earth, where cooling fountains flow,
Will be a stage where wooden puppets come and go.


If there were no beggars, (the actions done in) the cool wide world would only resemble the movement of a puppet.



irappaarai illaayin eerngaNmaa Gnaalam
marappaavai sendruvanh thatru


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

கொடுப்பவர் இடத்தில் கேட்டு பெற வேண்டும் தர மறுத்தால் அது அவரது பழிச்செயல் அல்லாமல் நம் குற்றம் ஆகாது. இன்பமும் அழகும் உடையது இல்லை என்பவர் இடம் கேட்டு பெறுவது. கேட்பதும் கொடுப்பதை போன்றது வெறுப்பை கனவிலும் காட்டாதவர். அவரால் பிறர் துன்பம் தொலையும். இழிவு செய்யாது கொடுப்பவரால் உள்ளம் மகிழும். கேட்பவற்கு கொடுக்க ஆள் இல்லை என்றால் மனிதன் மரப்பாவையாக மாறினான் என ஆகும். கொடுப்பவர் மதிப்பு கேட்பவரால் தீர்மானிக்கப்படுகிறது. கொடுக்கவில்லை என கோபமடைதல் குற்றம் மாறாக அதற்கு நம் வறுமையே காரணம் என உணர வேண்டும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.