திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: நல்குரவு / Poverty

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.



நல்லனவற்றை தெளிவாக பொருள்படும்படி நன்றாக உணர்ந்து சொன்னாலும் இல்லாமையில் இருப்பவர் சொல்லும் பொழுது அப்பொருள் முழுமை பெறாது.



நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.



நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.



அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்.


Though deepest sense, well understood, the poor man's words convey,
Their sense from memory of mankind will fade away.


The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression.



Narporul Nankunarndhu Sollinum Nalkoorndhaar
Sorporul Sorvu Patum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வறுமையை விட கொடியது வறுமையே இது இன்று நாளை என எப்பொழுதும் வரும் வந்தால் சேர்த்த பொருளும் திட சிந்தனையும் கெடும். நற்குடியில் பிறந்தவரும் தன்நிலை இழக்கச் செய்யும் நல்குரவு வந்தால் தாயும் அந்நியமாக போவாள். நெருப்பிலும் தூங்கலாம் வறுமையில் சாத்தியம் இல்லை எனஙே நல்குரவு வராதபடி காக்கவேண்டும். தூய்மையற்ற துறவி உப்புக்கும் காடிக்கும் வழியின்றியே துறவை மேற்கொள்கிறான்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.