திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: உழவு / Farming

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.



உழவு செய்து வாழ்பவர்கள் மட்டுமே வாழ்பவர்கள் மற்றவர்கள் உழவர்களை தொழுது உண்டு பின் செல்பவர்கள்.



உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.



பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.



உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.


Who ploughing eat their food, they truly live:
The rest to others bend subservient, eating what they give.


They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life.



uzhudhuNdu vaazhvaarae vaazhvaarmaR Rellaam
thozhudhuNdu pinsel pavar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பலவகை மாற்றங்களுடன் உலகம் சுற்றினாலும் உழவே தலைமையானது அதுவே உலக இயக்கத்திற்கு மூலமானது. உழவே உலகின் ஆணி எனவே அவரை தொழுது உண்பதே மற்றவர் பணி. பலகுடையும் பணியும் உழவே இல்லை என்றால் துறவியும் வீணே. ஏர் விடுதலை விட சிறந்தது எரு இடுதல், நீர் பாய்ச்சுவதை விட சிறந்தது பாதுகாப்பது. கவனியாத மனைவியின் ஊடல் போல் நிலமகளும் செய்வாள். சோம்பேறியை நிலமகள் கண்டு வெட்கப்படுவாள்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.