திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: நாணுடைமை / Shame

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.



உடல் தேவையும் தேவையற்றதை வெளியேற்றுவதும் உயிர் உள்ள அனத்திற்கும் வேறுபாடு இல்லாமல் இருக்கிறது.ஆனால் நாணுடைமை மனிதர்களின் தனிச்சிறப்பு.



உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.



உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.



உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்.


Food, clothing, and other things alike all beings own;
By sense of shame the excellence of men is known.


Food, clothing and the like are common to all men but modesty is peculiar to the good.



ooNudai echcham uyirkkellaam vaeRalla
naaNudaimai maandhar siRappu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

செய்யப்படும் செயல்களைக் கொண்டு நாணுவதும் பெண் நாணுவதும் வெவ்வெறு தன்மை உடையது. உயிர் மீது பற்றும் உடல் அழுக்கை அகற்றுவதும் எல்லா உயிர்களுக்கும் சமம் மனிதனுக்கு மட்டுமே நாணுதல் எனும் சிறப்புள்ளது. நாணமே முன்னோடிக்கு அணி, தற்காப்பு கவசம். நாணம் உள்ளவர்கள் உயிரை துறக்க தயங்குவது இல்லை. நாணம் அற்றவர்களை அறம் காப்பதில்லை. நாணம் இல்லாதவர் மரப் பொம்மை போன்றவர்..


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.