திருவள்ளுவரின் திருக்குறள்

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.



அன்பில்லாமல் தன்னை வருத்தி அறம் பார்க்காமல் சேர்த்த அனைத்து பொருளையும் அடுத்தவரே அனுபவிப்பார்.



பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்தப் பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.



பிறர்க்கு ஈயாமல் அன்பை விட்டு விலகி, எதையும் அனுபவிக்காமல் தன்னை வருத்தி, அறத்தை எண்ணாது சேர்த்த பொருளை மற்றவர் அனுபவிப்பர்.



அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர்.


Who love abandon, self-afflict, and virtue's way forsake
To heap up glittering wealth, their hoards shall others take.


Strangers will inherit the riches that have been acquired without regard for friendship, comfort and charity.



anporeeith thaRsetru aRanhoakkaadhu eettiya
oNporuL koLvaar piRar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

சொல்லமுடிய பொருள் சேர்த்து அனுபவிக்காமல் இறந்தால் என்ன பயன், அதை தகுதியானவற்கு கொடுக்காதவர் பிறவித்துன்பம் அடைவார். பொருள் சேர்க்கும் பண்பை கடந்து பிறவற்றின் மீது ஆர்வம் இல்லாதவர் பூமிக்கு பாரமானவரே. கொடுப்பது தூய்ப்பது என செய்யாத பொருள் வீணே. பயனற்ற செல்வம் பழான மரம் ஊர் நடுவே இருப்பதை போன்றது. அறமற்று சேர்த்த செல்வம் அடுத்தவரே அனுபவிக்க ஏதுவானது. சீரான செல்வருக்கு வரும் துன்பம் மாழைக்கான கார் இருள் போல் வந்து நன்மை பயக்கும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.