திருவள்ளுவரின் திருக்குறள்

பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.



பொருளாள் எல்லாம் ஆகும் என்று யாருக்கும் கொடுக்காமல் இருக்கும் யாரும் அருளற்ற மீளா பிறப்பு அடைவர்.



பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.



பொருளால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று எண்ணி அதைத் தேடிய பின் தானும் அனுபவிக்காமல், பிறர் தேவைக்கும் அதைத் தராமல் கஞ்சனாக வாழ்பவனின் மயக்கத்தால் அவனுக்கு முழுமையற்ற பேய்ப்பிறப்பு உண்டாகும்.



யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான்.


Who giving nought, opines from wealth all blessing springs,
Degraded birth that doting miser's folly brings.


He who knows that wealth yields every pleasure and yet is so blind as to lead miserly life will be born a demon.



poruLaanaam ellaamendru eeyaadhu ivaRum
maruLaanaam maaNaap piRappu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

சொல்லமுடிய பொருள் சேர்த்து அனுபவிக்காமல் இறந்தால் என்ன பயன், அதை தகுதியானவற்கு கொடுக்காதவர் பிறவித்துன்பம் அடைவார். பொருள் சேர்க்கும் பண்பை கடந்து பிறவற்றின் மீது ஆர்வம் இல்லாதவர் பூமிக்கு பாரமானவரே. கொடுப்பது தூய்ப்பது என செய்யாத பொருள் வீணே. பயனற்ற செல்வம் பழான மரம் ஊர் நடுவே இருப்பதை போன்றது. அறமற்று சேர்த்த செல்வம் அடுத்தவரே அனுபவிக்க ஏதுவானது. சீரான செல்வருக்கு வரும் துன்பம் மாழைக்கான கார் இருள் போல் வந்து நன்மை பயக்கும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.