திருவள்ளுவரின் திருக்குறள்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.



இறைவன் அடி சார்ந்தால் பிறவி கடலை நீந்தலாம்.இல்லையேல் நீந்தமுடியது.



இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.



கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.



வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.


They swim the sea of births, the 'Monarch's' foot who gain;
None others reach the shore of being's mighty main


None can swim the great sea of births but those who are united to the feet of God



PiRavip Perungatal neendhuvar neendhaar
iRaivan adiseraa Thaar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

கடவுள் உண்டு அது இந்த உலகத்திற்கு துவக்கமாக உள்ளது. அதை பகுத்து அறிந்தவனை நாடி புரிந்துக் கொள்ளாமல் படிப்பதால் எந்த பயனும் இல்லை. அறிந்தவன், மலராகிய உபதேசப் பொருளில் நின்று வாழ்வான். தேவையானவர் தேவை அற்றவர் என்ற பாகுபாடிகளை கடந்த அவரே குரு. அறியாமை உண்டாக்கும் இரு வினைகளை கடந்தவனே இறைமையை புரிந்து புகழை அடைகிறான். பொறிகளுக்கு நன்றியுடன் இருந்து பொய் அற்று வாழ்பவன் சிறந்த வாழ்வை வாழ்பவனாவான். நிகரற்ற தனது உபதேசப் பொருளை அடையாமல் மனக்கவலை மாற்றுவது இயலாது. அப்படி அறமுடன் இருப்பவரை அறிந்தால் பிறவி துன்பமும் போகும். கோள்களைக் காட்டிலும் மேலான குணங்கள் படைத்தவரை வணக்குவது நல்லது. பிறவி என்ற பெரிய கடலை கடக்க இறைவனின் துணை அவசியம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.