வறட்சிக்கான காரணங்கள்

பாரம்பரிய பயிர் வகைகளை செய்யாமல் பணப்பயிர்களை செய்தது. தக்காளி, கரும்பு, கத்திரிக்காய், பழங்கள், தென்னைமரம் மற்றும் ஐப்ரிட் வகைகள் பணப்பயிர்களை சார்ந்தது. அப்படியே செய்தாலும் 20 km மேல் எடுத்து சென்று விற்றால் தங்கள் நிலத்திற்க்கும் நிலத்தை சுற்றியுள்ள இடத்திற்க்கும் தோசம் வரும். தொடர்ந்து செய்தால் பாலைவனமாக மாறும்.

எல்லா உயிர்கள் பிறந்தது இன்பத்தை அநுபவம் செய்வதற்க்கு தான். முக்கியமாக உடலுறவு. அதை தடுத்தால் வாழ்ந்த உயிர் பகுதியில் தோசம் வரும். நடைமுறையில் உள்ள ஜெர்சி மாடு, கோழி போன்ற பல உயிர்களுக்கு இயற்கையாக அல்லாமல் செயற்கையாக கரு உற்பத்தி செய்தது செய்வது. தாங்கள் இப்படி செய்திருந்தால் தங்களுக்கும் தங்கள் சந்ததிக்கும் இதே நிலை கூடியவிரைவில் வரும்.

தங்களுக்கு மருத்தவம் பார்பவர்களுக்கும், பாடத்தை சொல்லித்தரும் ஆசிரியர்களுக்கும் குருவுக்கும் , ஜோதிடற்களுக்கும் மற்றும் தங்கள் வீட்டிற்கு பூஜை செய்பவர்களுக்கும், தங்களுக்கு உதவி செய்பவர்களுக்கும் தானியங்களை கொடுக்காமல் பணத்தை கொடுத்தால் தோசம் வரும்.

தவறான சோதிடர்கள், தவறாக வாஸ்து பார்பவர்கள்,பிரம்மத்தை பற்றி தெரியாமல் பிராமணர் என்று சொல்லிக்கொள்பவர், மக்களுக்கு உடல் உபாதைகள் உற்பத்தி செய்து மருத்துவம் பார்பவர்கள், தேவையில்லாத கல்வி முறையை பழக்கப்படுத்துபவர்கள் அதிகம் இருந்தால் பேரழிவு நிச்சயம்.

நிலங்களை பொதுவாக மாற்றாமல் ஆட்சி புரிந்தால் இயற்கை பேரழிவு உறுதி.வறட்சிக்கான மிகப்பெரிய வித்து இது. மக்கள் தொகை அதிகமாகவும் நிலங்கள் குறைவாக உள்ள நாட்டில் நிலத்தை பொதுவாக மாற்றுவது சிறந்தது. இல்லையென்றால் பலவிதமான மனமயக்கத்தில் நிலங்கள் சுரண்டப்படும்.

உணவுகளை நன்றாக மென்று அரைத்து கூழ்போல் மாற்றி அதற்க்கு மேல் தண்ணீர் போன்று மாற்றி உண்ண வேண்டும். பசி எடுக்கும் பொழுதுதான் சாப்பிட வேண்டும். தாகம் எடுக்கும் பொழுது தான் தண்ணீரை சாப்பிட வேண்டும். உணவுகளை மதிக்காத மக்கள் தங்கள் பகுதியில் கால் பங்குக்கு மேல் இருந்தால் தோசம் வரும்.

கடவுளை வழிபட தெரியாத மக்கள் அரை பங்குக்கு மேல் இருந்தால் தொசம் வரும். கட்டிடங்கள் மற்றும் கல்லால் செய்யபட்ட சிலையை வணங்குவது கடவுள் வழிப்பாடு இல்லை. அது குழுந்தைகளுக்கு சொல்லித்தருவதற்க்கும் பாடம் கற்பதற்க்கும் கட்டபட்டதாகும்.
தியானம் மற்றும் தவம் செய்பவர்களுக்கு இடையூறு செய்தால் மிகப்பெரிய தோசம் வரும்.இரண்டு மணி நேரத்திற்க்கும் மேல் இருக்கையில் அமர்ந்து வழிபாடு செய்பவர்களை தான் மதிக்க வேண்டும்.

அரசாங்கத்தில் வேலை செய்யும் உயர் அதிகாரிகள் கடவுளையையும் இயற்கையையும் உணர்ந்து இருக்க வேண்டும். இல்லையென்றால் எல்லோரையும் தவறாக வழிநடத்தபடுவார்கள்.

கல்யாணத்திற்க்கும் கருமாதிக்கும் மற்றும் சில சடங்குகளுக்கு அதிகமான கூட்டம் சேர்ந்தால் தோசம் வரும். ஆடம்பரம் என்றும் இயற்கை பேரழிவை கொடுக்கும்.

உயிர் பிரிந்த பிறகு துர்நாற்றம் வீசும் உடலை மதிக்க கூடாது. சமாதி என்ற பெயரில் கட்டடம் கட்டக்கூடாது. முக்கியமாக வணங்க கூடாது. அப்படி வணங்கினால் மிப்பெரிய தோசம் தங்கள் பகுதிக்கு வரும். இறந்தவரின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்லவே செல்ல வேண்டும்.

கல்யாணத்திற்க்கு பரிசு பொருட்கள், பணம் வாங்குவது தவிர்க்கபட வேண்டும். கல்யாணம் தொடர்ந்து நடைபெறுவதால் நீங்கள் மற்றவருக்கு செய்வதும் அவர்கள் தங்களுக்கு செய்வதும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும். கல்யாணத்திற்க்கு அழைக்கிறார்கள் என்றால் தங்களின் வாழ்த்து பெறுவதற்க்காக தான். தாங்கள் வாழ்த்தை வழங்குவதற்க்கு பதில் பணத்தையும் பரிசு பொருளையும் கொடுத்து வியாபாரம் செய்வதால் தவிர்க்கமுடியாத பல மாயைகளில் சிக்கி இயற்கையை அழித்துகொண்டிருக்கிறோம்.

பாரம்பரியத்தில் விளைந்த முழு தானியங்களை அதாவது நெல்லை வைத்துகொண்டுதான் வாழ்த்துவார்கள். அதுவுமில்லாமல் வாழ்த்தும் பொழுது நெல்லை மெதுவாக மனமகள் மற்றும் மனமகன் உச்சந்தலையில் வைத்துவிட்டு வரவேண்டும். இதுதான் வாழ்த்தும் முறை. ஆனால் இன்று அரிசியில் மஞ்சள் கலந்து வாழ்த்துகிறோம். அமர்ந்த இடத்திலிருந்து மஞ்சள் கலந்த அரிசியை தூக்கி மணமக்களின் மீது வீசுகிறோம். இது தவறான பன்பாடு. இந்த தவறான பன்பாடுகளில் விருப்பமில்லாமல் பணங்களையும் பரிசுப்பொருளையும் கொடுக்கிறோம். இதனால் வறட்சி ஏற்படுவதற்க்கு வாய்ப்பு அதிகம்.

கருமாதியிலும் இதே நிலைமை தான். செத்து போன பிணத்திற்க்கு எதற்க்கு மதிப்பும் மரியாதையும். பத்து பேர் சேர்ந்து அந்த பிணத்தை புதைத்து ஒரு செடியை நட்டுவிட்டால் அந்த செடிக்கு பலம் வரும். அல்லது ஒரு மரத்திற்க்கு அருகில் புதைத்தால் மரத்திற்க்கு உரமாக மாறிவிடும். அதற்க்கு பதில் பல சடங்குகள் செய்து பிணத்தின் உயிர் பிரிவதற்க்கு முன் சொந்தத்துக்கு செலவு செய்ய தூண்டப்படுகின்றன. அதனால் இயற்கை அழிகிறது. தேவையில்லாத பல சடங்குகளை குறைப்பது மிகவும் நல்லது. சமாதி என்ற பெயரில் பல தவறான பழக்கக்கங்களை மேற்கொள்கின்றனர்.

ஜீவன் பிரிந்த பிறகு உடல் துர்நாற்றம் வீசாமல் இருக்கும் உடலை சரியான முறையில் பாதுகாக்க படவேண்டும். அவர்கள் தவசீலர்களாக இருக்ககூடும். அவர்களுக்கு தான் சரியான முறையில் சமாதி அடக்கம் செய்ய வேண்டும். துர்நாற்றம் வீசும் உடலுக்கு அதிகமான மக்களுக்கு கூறாமல் புதைத்து விடவேண்டும். அதுவே துர்நாற்றம் வீசாமல் உடல் அழுகாமல் இருக்கும் உடலுக்கு அதிகமான தொந்தரவு செய்யாமல் சரியான முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்று பெரியோர்களின் கூற்று.

மேலே சொன்ன தோசம் தங்கள் பகுதியில் அதிகமாக இருந்தால் வறட்சி தங்கள் பகுதிக்கு நிச்சயமாக வரும்.சொன்ன செய்தியில் உண்மையும் மற்றும் மற்றவர்களுக்கு பயன்படும் என்று நம்பினால் இச்செய்தியை மற்றவர்களுடன் பகிருங்கள். இயற்கை பற்றி சிந்தனை உள்ளவர்களுக்கு இச்செய்தி நிச்சயமாக புரியும்.மாற்றம் தேவைபடுகிறது. யோசிப்போம். செயல்படுவோம். உயருவோம்.

மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
-சசிகுமார் சின்னராஜு

Share

sasikumar

i am sasikumar graduated as an Electrical and Electronics Engineer. Now i am working as software web developer. Since my college first year onwards my thoughts move towards peace and still i collecting information related to simple and happy living style. Here i share Information related to health, simple life style and yoga.

Leave a Reply

Your email address will not be published.