67. இடுகுறி காரண பெயர் பொது சிறப்பின
68. அ முதல் ஈர் ஆறு ஆவி க முதல்
மெய் மூ ஆறு என விளம்பினர் புலவர்
69. அவற்று உள்
அ இ உ எ ஒ குறில் ஐந்து ஏ
70. ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ நெடில்
71. அ இ உ முதல் தனி வரின் சுட்டு ஏ
72. எ யா முதல் உம் ஆ ஓ ஈற்று உம்
ஏ இரு வழி உம் வினா ஆகும் ஏ
73. வல்லினம் க ச ட த ப ற என ஆறு ஏ
74. மெல்லினம் ங ஞ ண ந ம ன என ஆறு ஏ
75. இடையினம் ய ர ல வ ழ ள என ஆறு ஏ
76. ஐ ஔ இ உ செறிய முதலெழுத்து
இவ் இரண்டு ஓர் இனம் ஆய் வரல் முறை ஏ
77. தானம் முயற்சி அளவு பொருள் வடிவு
ஆன ஒன்று ஆதி ஓர் புடை ஒப்பு இனம் ஏ
பெயர்,எழுத்தியல்,எழுத்ததிகாரம்,நன்னூல் இலக்கணம் nannool பவணந்தி முனிவர்