பவணந்தி முனிவரின் நன்னூல்

67.  இடுகுறி காரண பெயர் பொது சிறப்பின

68.  அ முதல் ஈர் ஆறு ஆவி க முதல்
மெய் மூ ஆறு என விளம்பினர் புலவர்

69.  அவற்று உள்
அ இ உ எ ஒ குறில் ஐந்து ஏ

70.  ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ நெடில்

71.  அ இ உ முதல் தனி வரின் சுட்டு ஏ

72.  எ யா முதல் உம் ஆ ஓ ஈற்று உம்
ஏ இரு வழி உம் வினா ஆகும் ஏ

73.  வல்லினம் க ச ட த ப ற என ஆறு ஏ

74.  மெல்லினம் ங ஞ ண ந ம ன என ஆறு ஏ

75.  இடையினம் ய ர ல வ ழ ள என ஆறு ஏ

76.  ஐ ஔ இ உ செறிய முதலெழுத்து
இவ் இரண்டு ஓர் இனம் ஆய் வரல் முறை ஏ

77.  தானம் முயற்சி அளவு பொருள் வடிவு
ஆன ஒன்று ஆதி ஓர் புடை ஒப்பு இனம் ஏ

Meta Information:
பெயர்,எழுத்தியல்,எழுத்ததிகாரம்,நன்னூல் இலக்கணம் nannool பவணந்தி முனிவர்